பொது நெருக்கடி நிலைகளுக்கான உரிய செயன் முறை மற் றும் தயார் நிலை: கொவிட் -19 தொற் றுநோயிலிருந் து இலங் கைக் கான படிப் பினைகள

கொவிட்-19 நோய்த்தொற்று காலப்பகுதியில் இலங்கையின் நீதி முறைமை சந்திக்க நேரிட்ட சவால்கள் காரணமாக உரிய செயன்முறை மீது ஏற்பட்ட தாக்கங்கள் தொடர்பில் இந்த அறிக்கையில் ஆராயப்படுகின்றது. கொவிட்-19 கட்டுப்பாடுகளின் காரணமாக கடுமையாக பாதிப்புக்குள்ளாகிய உரிய செயன்முறையின் இரண்டு பிரதான உரிமைகளை இவ்வறிக்கை அடையாளங்கண்டுள்ளது: (1) நியாயமான விளக்கமொன்றினை பெற்றுக்கொள்வதற்கான உரிமை மற்றும் (2) சட்ட பிரதிநிதித்துவம் மற்றும் சட்;ட உதவிகளை பெற்றுக்கொள்வதற்கான உரிமை.

நீதித்துறை பொது நெருக்கடி நிலைகளுக்கான அதன் தயார்நிலையை மேம்படுத்துவதன் மூலம் எதிர்காலத்தில் உரிய செயன்முறையை பலப்படுத்துவதற்கு முன்னெடுக்கக்கூடிய பல்வேறு குறுகிய கால மற்றும் நீண்ட கால நடவடிக்கைகளை இவ்வறிக்கை வெளிக்கொண்டு வந்துள்ளது.